Tamil E-books Free Online Reading
-
நினைவு நல்லது வேண்டும் (Ninaivu Nallathu Vendum)
Tamil e books free online read and download
-
மாவீரன் அலெக்ஸாண்டர் (Alexander the Great)
Tamil e books free online read and download
-
அவளும் நானும்-2
Tamil e books free online read and download
-
அவளும் நானும்
Tamil e books free online read and download
-
என் நினைவில் பொங்கல்….
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….. எல்லாரும் டிசம்பர் வந்த புது வருஷம் பிறக்கப்போகுதுனு ஆவலா இருப்பாங்க ஆனா எனக்கு இன்னும் பொங்கலுக்கு ஒரு மாசம்தான் இருக்குனு தோணும். அதுக்கு காரணம் என்னோட குழந்தைப்பருவ பொங்கல்கள் எனக்கு அவ்வளவு இனிய நினைவுகளை கொடுத்திருக்கு. பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னாடியே எங்க பாட்டி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. வெளி சுவருக்கெல்லாம் சுண்ணாம்பு அடிச்சு, வாசலுக்கு சாணி போட்டு மெழுகி வீடே புதுசா மாறிடும். போகி பண்டிகை அன்னைக்கு வீட்டுக்கு பெரியம்மா, அக்கா,எல்லாரும் வந்துடுவாங்க, எங்க வீட்டுக்கு மட்டுமில்லை எங்க வீட்டை சுத்தி இருக்க எல்லார் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருப்பாங்க. ஊரே ஜேஜேன்னுதான் இருக்கும், வீட்டுக்கு பக்கத்துல இருக்க மாரியம்மன் கோவிலில் மைக் செட் வெச்சு பாட்டு போட்டிருப்பாங்க. போகி அன்னைக்கு எங்க பாட்டி பூசணிக்காய், அவரைக்காய் செஞ்சு பாசிப்பயறு குழம்பு வைப்பாங்க. எனக்கு பூசணிக்காயும் பிடிக்காது, அவரைகாயும் பிடிக்காது, என்னமா வருஷம் வருஷம் இதையே
Tamil e books free online read and download
-
மாவீரன் அலெக்ஸாண்டர்
என் அன்பு சகாக்களுக்கு, எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு, அப்படி நான் படிக்கும் புத்தகங்களில் வரும் சில விஷயங்கள், சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்துவிடும். அப்படி என் மனதில் பதிந்து போன ஒரு சம்பவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், சம்பவத்தை முழுவதும் படித்த பின் அதை நான் ஏன் உங்களுடன் பகிர்ந்தேன் என்பதை கூறுகிறேன். (புத்தகம் பெயர்: மகா அலெக்சாண்டர்; ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்) அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் மாசிடோனிய மன்னர் பிலிப். அறைக்கு வெளியே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. அறையின் வாசலைப் பார்த்தார். வெளியே அவரது மகன் நின்று கொண்டிருந்தான். ‘வா அலெக்சாண்டர், என்ன விஷயம்? அதிகாலையில் வந்திருக்கிறாய்?’ ‘இல்லை. உங்களைப் பார்த்துப் பேச வேண்டும்போல இருந்தது.’அப்படியா, நான் ஒரு குதிரைப் போட்டியைக் காண்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன். என்னுடன் வந்தால் வழியில் பேசலாம். தாராளமாக, ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்துவிடுகிறேன். இதற்காகவே
Tamil e books free online read and download
-
சூழ்ச்சி வலைகள்-2
என் அன்பு சகாக்களுக்கு, நாம் நம் வீட்டு இளவரசிகளின் பாதுகாப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். முகம் தெரியாதவர்கள் நம் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி பேசினோம், முகம் தெரியாதவர்களை தவிர்ப்பது எளிது. நம் பெண்கள் வெளியாட்களை அவர்கள் வாழ்க்கையில் அனுமதிக்காத வரை,அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. ஆனால் அன்றாட வாழ்வில் நம் பெண்கள் பலரை சந்திக்கின்றனர், குடியிருப்பு காவலாளி தொடங்கி, நடத்துனர்,ஆட்டோக்காரர், வாடகை கார் ஓட்டுநர்,உடன் பணிபுரிபவர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஆபத்தானவர்கள் என்று நான் சொல்லவில்லை. இவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்பவர்கள் என அனைவரும் அடக்கம். இவர்களில் யார் எப்படி என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதில் நாம் நம் பெண்களுக்கு சில தற்காப்பு நடவடிக்கைகளை சொல்லிக்கொடுப்பது அவசியம். “வருமுன் காப்போம் ” வந்தபின் வருத்தப்பட்டு பயன் இல்லை. 1) எப்பொழுதும் பொது இடங்களில் விழிப்புடன் இருக்க சொல்லுங்கள் . பேருந்திற்கு நிற்கும்
Tamil e books free online read and download
-
சூழ்ச்சி வலைகள்
“Be a strong woman. So your daughter will have a role model and your son will know what to look for in a woman when he’s a man. ” என் அன்பு சகாக்களுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன். அதை பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், இது பலருக்கு அச்சத்தையும், என்னதான் செய்வது போன்ற உணர்வையும் கொடுக்கும். அந்த காணொளியில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசுகிறார். அந்த சம்பவம் இதுதான், ஒரு கல்லூரி மாணவிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி நீ அழகாக இருகிறாய் என்று வருகிறது. இது யாராக இருக்கும் என்று அந்த பெண் யோசிக்கிறாள், அன்று முழுவதும் அந்த சிந்தனை அவளுக்கு இருக்கிறது. இரு தினங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது இன்று
Tamil e books free online read and download
-
நிதானம்
“Today a reader, tomorrow a leader.” – Margaret Fuller என் அன்பு சகாக்களுக்கு, இது ஸ்மார்ட் போன் உலகம், நம்ம கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் விட நம்ம குழந்தைங்க ஸ்மார்ட்டா இருக்காங்க. பாட்டி தாத்தாக்கு பேரன் பேத்தி போன் பயன்படுத்துறதை பார்த்து ஒரே பெருமையா இருக்கு . இந்த வளர்ச்சிக்கு இடையில் நம்ம கவனிக்க தவறிய விஷயம் தான் நிதானம்.இன்றைக்கு வாழ்க்கை ஓட்டப்பந்தயம் போல் ஆகிவிட்டது,அதிவேக இரயில், துரித உணவகம்,என்று வாழ்க்கை நிமிடங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நம் குழந்தை பருவம் இதுபோன்றது இல்லை. நாம் நம் வாழ்வை நம்மை சுற்றி இருந்தவற்றை நிறுத்தி நிதானமாக ரசித்து வளர்ந்தோம்.அந்த நிதானம் இன்று நம்ம குழந்தைகளிடம் இல்லை. ஸ்மார்ட் போனில் விளையாடும் அதிவேக விளையாட்டுகள்,பார்க்கும் குழந்தைகள் படங்கள், தினசரி வாழ்க்கையில் வெளியில் பார்க்கும் பரபரப்பு என்று அனைத்தும் அவர்களுக்கு வேகத்தை கற்றுக்கொடுக்கிறது. இந்த வேகம் நாளடைவில் அவர்களிடம் இருக்கும்
Tamil e books free online read and download
-
சொல்வதில் மாற்றம் …..
என் அன்பு சகாக்களுக்கு நீங்க எல்லா நினைக்கலாம் எப்பவும் பிள்ளைகளை திட்டக்கூடாது,கோவமா பேச கூடாது,இப்படி சொல்லிட்டே இருக்காங்களே அப்ப நாங்க பிள்ளைங்க என்ன செஞ்சாலும் கேக்கக்கூடாதா. நிச்சயம் கேட்கணும், ஆனா அதை எப்படி கேட்கிறோம், அல்லது எப்படி சொல்கிறோம் என்பதுதான் வேறுபாடு. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு அரிசி தீர்ந்துட்டா, அரிசி இல்ல வாங்கணும் அப்படினு சொல்லாம, அரிசி வேணுன்னு சொல்லுவோம் ரெண்டுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இல்ல னு சொல்றது எதிர்மறை, வேணுன்னு சொல்றது நேர்மறை அவ்வளவுதான் வித்தியாசம். இப்படி ஒரு தப்பு செஞ்ச நீ என் பிள்ளையே இல்லை அப்படினு சொல்லாம உன்கிட்ட இருந்து இதை நான் எதிர் பாக்கல,இதைவிடவும் என் பிள்ளைக்கு நல்ல மாதிரி சிந்திக்க தெரியுனு நம்பினேன் சொல்லி பாருங்க, அடுத்த முறை உங்க நம்பிக்கையை அவங்க பொய் ஆக்க மாட்டாங்க. பிள்ளைகளை நாள் வழி படுத்துறது பெற்றோர்களோட கடமை அதை சரியான முறையில்
Tamil e books free online read and download
-
தேர்வு முடிவுகள் ……..
என் அன்பு சகாக்களுக்கு, சில முக்கிய வேலைகள் முடிக்கவேண்டியது இருந்தது அதனால உங்ககூட தொடர்ந்து பேசமுடியாம போச்சு. எல்லாரும் நலமா இருப்பீங்கனு நம்புற. தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்னும் பரபரப்பு குறையாம இருக்கு, பலரின் கருத்துக்கள், கோவங்கள், ஏமாற்றங்கள், வாக்குறுதிகள் இப்படி இந்த தேர்தல் பற்றி பேச பல விஷயங்கள் இருக்கு. ஆனால் நம்ப இன்னைக்கு அதை பற்றி பேசப்போறதில்லை, நாம் அந்த தேர்தல் முடிவுகளுக்கும் முன்னாடி வந்த தேர்வு முடிவுகளை பற்றி தான் இங்க பேசப்போறோம். இந்த தேர்வு முடிவுகள் எப்பவும் எனக்கு பயத்தை கொடுக்கும், நான் படிச்சுட்டு இருக்கவரைக்கும் முடிவுகள் எப்படி வருமோங்குற பயம் , ஆனா இப்ப தேர்வுமுடிவுகளுக்கு அப்புறம் வரும் தற்கொலை செய்திகள் பற்றிய பயம். நம் குழந்தைகள் நமக்கு பயந்து தற்கொலை முடிவுக்கு போறாங்க, இதுக்கு முழு பொறுப்பும் நாம் தான். மதிப்பெண் முக்கியமானதுதான் ஆனா அதுவே வாழ்க்கை கிடையாது. சுவர் இருந்தால் தான்
Tamil e books free online read and download
-
மகிழ்ச்சி…..
“மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை”. என் அன்பு சகாக்களுக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லபோறேன். கண்டிப்பா கதைக்கு அப்புறம் கொஞ்சம் கருத்து சொல்லுவேன் அதுக்காக கதையை படிக்காம விட்டுடாதீங்க….. ஒரு நாட்டின் அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான் . அதில் மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஒர் எண்ணம் …அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், “ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக்
Tamil e books free online read and download
-
மக்களாட்சி …….
குரல்: செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். விளக்கம்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். என் அன்பு சகாக்களுக்கு, எப்பவும் குழந்தைகள் அவங்க வளர்ப்பு இப்படியே பேசிட்டு இருக்கோம் அதனால் ஒரு மாற்றத்துக்கு பரபரப்பான தேர்தல் விஷயங்களை பற்றி கொஞ்சம் பேசுவோம். மன்னர் ஆட்சி, அடிமை முறை, குடவோலை முறை, இப்படி கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் நம்மோட மக்களாட்சி தேர்தல் முறை. இந்த நாடும் நட்டு மக்களும் எவ்வளவோ தேர்தல்களையும் தலைவர்களையும் சந்திச்சுட்டாங்க. அவற்றில் சிலது வரலாறு, சிலது பாடம், சிலது தண்டனை. ஒரு ஒரு தேர்தலும் மக்களுக்கு எதையாவது கற்றுக்கொடுத்துகிட்டு தான் இருக்கு. பலரின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்த தேர்தல் நிர்ணயிக்கிறது.எழுச்சி வீழ்ச்சி என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல மக்களாகிய நமக்கும்தாம். நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் நம் வாழ்கை போக்கை மாற்றும் வல்லமை படைத்தவர்
Tamil e books free online read and download
-
நம்பிக்கை 2…….
என் அன்பு சகாக்களுக்கு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான நம்பிக்கை பற்றி பேசிட்டு இருந்தோம்.எல்லா உறவுகளுக்குமான அடிப்படை விஷயம் நம்பிக்கை. ஒரு குழந்தை பிறக்கும்போது அது நம்புவது தாய் ,தந்தையை மட்டும்தான். அம்மா இதுதான் அப்பா,தாத்தா,பாட்டி என்று அறிமுகம் செய்யும்போது குழந்தை அதை கேள்வி இன்றி ஏற்கிறது. அப்பா இதுதான் வானம், கடல், பறவை என்று சொல்லிக்கொடுக்கும் போது குழந்தை அதனை பிரமிப்போடு பார்த்து மகிழ்கிறது. இந்த நம்பிக்கை எங்கு உடைபடுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா ? என்று முதல் முறை உங்கள் பிள்ளைகளை நீங்கள் வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசுகிறீர்களோ அன்று அந்த நம்பிக்கையில் முதல் விரிசல் ஏற்படுகிறது. அவர்கள் சார்பாக நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது அவர்கள் விருப்பங்களை ஏற்க மறுத்தால் அந்த விரிசல் அதிகரிக்கிறது. யாரை நம்புவது என்று அவர்கள் குழம்பிப்போகுது அந்த இடத்தை நட்பு நிரப்புகிறது. உலகில் மிக அழகான விஷயங்களில் நட்பும் ஒன்று. ஆனால் அது நன்மையா,
Tamil e books free online read and download
-
நம்பிக்கை
என் அன்பு சகாக்களுக்கு ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதான் உங்ககூட பேச முடியலை. ஆனா ரொம்போ முக்கியமான விஷயத்தை உங்ககூட பேசனுன்னு காத்திருந்தேன். இந்த கொஞ்ச வாரமா தமிழ்நாட்டுல எல்லாரும் அதிகம் கேள்விபட்ட ஊர் பொள்ளாச்சி. பெண் இருக்கும் பெற்றோர் எல்லாருக்கும் பயத்தை கொடுத்த சம்பவம். கைபேசியோடு இருக்கும் பெண் குழந்தைகளை கண்டு பதறி போக வைத்தது. இந்த சம்பவம் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.நான் இங்கு அந்த சம்பவத்தை ஒரு பெண் அவளுடைய பெற்றோரிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாள் என்ற கோணத்திலிருந்து சில விஷயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த விஷயம் கேள்விப்பட்ட பிறகு எத்தனை பேர் உங்கள் வீட்டு பெண் கைபேசி பயன்படுத்தும்போது அவர்களிடம் காரணம் இன்றி கோவம் கொண்டீர்கள் பலர் செய்து இருப்பீர்கள். இன்னும் சிலர் அவர்கள் கைபேசியை சோதனை செய்து இருப்பீர்கள். விடுதியில் தங்கி படிக்கும் பெண்களுக்கு பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கும். எத்தனை பேர்
Tamil e books free online read and download
-
பாராட்டுக்கள்
என் அன்பு சகாக்களுக்கு, எனக்கு சின்ன வயசுல இருந்து கதை படிக்க ரொம்போ பிடிக்கும். சிங்கம் கதை,காகா கதை, குரங்கு கதை இப்படி நிறைய கதை கேட்டு இருக்க. எப்பாவது யோசிச்சு இருக்கீங்களா ஏன் நமக்கு விலங்குகளை உதாரணம் வெச்சு கதை சொல்றாங்கன்னு ஏன்னா அவங்களுக்கு நமக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. சுய சிந்தனை, புன்னகை, மனித நேயம் இவைதான் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசங்கள். எவளோ வித்தியாசம் இருந்தாலும் கதை படிக்குறது எப்பவும் ஜாலியான விஷயம். அதனால இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போற. ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தார்.“இன்னைக்கு இந்தக் காடு
Tamil e books free online read and download
-
ஸ்மார்ட் போனும், நாமும் !!
என் அன்பு சகாக்களுக்கு , எப்பவும் கருத்து சொல்லிகிட்டே இருக்கோமே அதனால ஒரு வித்தியாசத்துக்கு கதை சொல்லப்போற. இரவு 12 மணி. இப்படி சொன்ன உடனே பேய் கதைன்னு நெனைச்சுடாதீங்க இது சிங்கம் கதை. ‘டிங் டிங்’ எனச் சத்தம் தூங்கிட்டிருந்த சிங்கக்குட்டி கண் திறந்து பார்த்துச்சு. சார்ஜ் போட்டிருந்த ஸ்மார்ட்போன் மின்னிட்டிருந்துச்சு. ஏதோ வாட்ஸப்ல மெசேஜ் வந்திருக்கு. ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்’னு யோசிச்சுக்கிட்டே சிங்கக்குட்டி எழுந்துச்சு.வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணிப் பார்த்தால், அட.. அம்மாகிட்டயிருந்து ‘ஹேப்பி பர்த்டே’னு மெசேஜ். சிங்கக்குட்டியின் முகம், 1000 ஸ்மைலிகள் ஒண்ணு சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி மாறிருச்சு. இதே குகையின் பக்கத்து அறையிலிருந்துதான் அம்மா சிங்கம் மெசேஜ் அனுப்பி இருக்காங்க. ‘தேங்யூ… லவ் யூ அம்மா’னு ரிப்ளை பண்ணுச்சு சிங்கக்குட்டி. அப்புறம், கொட்டாவி விட்டுக்கிட்டே படுத்திருச்சு.சிங்கக்குட்டி எப்பவுமே தாமதமாகத்தான் எழுந்திருக்கும். அதேபோல, பர்த்டே அன்னைக்கும் தாமதமா கண்ணை முழுச்சது. பார்த்தால்… சிங்கக்குட்டியின் கட்டிலைச் சுற்றி
Tamil e books free online read and download
-
குழந்தை பருவம் …….
ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! என் அன்பு சகாக்களுக்கு, பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு இந்த பாட்டு தெரியும், நம்ம சின்ன வயசுல இதை கேட்டு இருக்கோம். நம்மளோட குழந்தை பருவம் ரொம்போ அழகானது விளையாட்டு போதும் வீட்டுக்கு வா, வெயிலில் சுத்துனது போதும் வந்து சாப்பிடு, எதுக்கு இந்த பள்ளி விடுமுறை விடுறாங்க இந்த பசங்களை வெச்சு சமாளிக்க முடியலை, இந்த வசனங்கள் சொல்லாத அம்மாவே இருக்க மாட்டாங்க.நம்ம வீடு தங்குனதே கிடையாது. கண்ணாமூச்சி, ஓடிபிடிச்சு விளையாடுறது, நொண்டி, இப்படி சொல்லிட்டே போலாம். அப்படி மண்ணுலயும், வெயில்லையும் விளையாடிய விளையாட்டு நமக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்துச்சு, உடம்புக்கு வலிமையை கொடுத்துச்சு. ஆனா இன்னைக்கு நம்ப குழந்தைகளுக்கு நம்ம என்ன கொடுத்துக்கிட்டு இருக்கோம் தெரியுமா ? மன அழுத்தம், கண்பார்வை குறைபாடு, கவனச்சிதறல், கற்றல்குறைபாடு இப்படி சொல்லிகிட்டே போலாம். இன்றைய தொழிநுட்ப உலகில்
Tamil e books free online read and download
-
வானம் வசப்படும்…..
“Children must be taught how to think, not what to think.” — Margaret Mead, cultural anthropologist என் அன்பு சகாக்களுக்கு பொதுவா பெற்றோர்கள் குழந்தைகளை ரொம்போ பாதுகாப்பா பாத்துக்கனுன்னு நினைப்பாங்க அதோட விளைவு பெரும்பாலான நேரத்துல குழந்தைங்களோட புது முயற்ச்சிகளுக்கு அது தடையா மாறிடுது. நம்மோட அனுபவங்களை எப்பவும் குழந்தைகள் மேல திணிக்கக்கூடாது. கீழ விழுந்துடாம சைக்கிள் கத்துக்க முடியாது, கையை சுட்டுக்காம சமையல் பழக முடியாது,தண்ணில முழுகாம நீச்சல் கத்துக்க முடியாது. இப்படி புதுசா கத்துக்குற எதுக்கு சில வலிகளை பொருத்துத்தாகணும். அந்த அனுபவங்களை உங்க குழந்தைங்களுக்கு குடுங்க அவங்க புதுசா எதாவது முயற்சி செய்யும்போது உங்க அனுபவம்னு சொல்லி அத தடுக்காதீங்க. புதுசா முயற்சி செய்யனுனு நினைக்குற அவங்க தேடல்தா அவங்களுக்கான எதிர்கால இலக்கை நிர்ணயிக்கும். முயற்சிகள் அவங்களுக்கு தோல்விகளை அறிமுகப்படுத்தும், தோல்விகளை சந்திக்க தெரிஞ்சதா வெற்றிக்கான வழி (வலி ) தெரியும்.
Tamil e books free online read and download
-
காலச்சுழற்சி ……
“To be in your children’s memories tomorrow, you have to be in their lives today.” என் அன்பு சகாக்களுக்கு குழந்தைக்கு என்ன தெரியும் அப்படினு மட்டும் நினைத்துடாதீங்க மலைநீர் எப்படி மண்ணு தனக்குள்ள உறிஞ்சுகுதோ அந்த மாதிரி நம்மளோட எல்லா சிந்தனைகளையும் குழந்தைகள் உள் வாங்கிக்குறாங்க. அப்ப அவங்களுக்கு குடுக்குற விஷயங்களை நம்ம தரமானதா குடுக்கணும். பெரும்பாலான அப்பாக்களுக்கு காலைல செய்தித்தாள் படிக்குற பழக்கம் இருக்கு, மனைவி கர்ப்பமா இருக்கப்ப அவங்கள கூட உக்கார வெச்சு சத்தமா படிங்க எல்லா படிக்கனுன்னு இல்ல சாதனைகள்,புத்தக வெளியீடு , விளையாட்டு , கலை இப்படி நேர்மறை விஷங்கள் படிக்கலாம்.அதுவே உங்க குழந்தை 5 வயசுக்குள்ள இருந்த நீங்களே கூட உக்காந்து படிச்சு காட்டுங்க.இது கொஞ்சநாள் அப்புறம் அவங்களுக்கே பழக்கமாயிடும். ‘சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” குழந்தைகளுக்கு ஒரு பழக்கத்தை கொண்டு வர நமக்கு தேவை
Tamil e books free online read and download
-
மாற்றம் நம்மில் தொடங்கட்டும்…..
“Children need models rather than critics.” — Joseph Joubert, French moralist நம்ப குழந்தைகள் மனோ வளர்ச்சிக்கு பெற்றோரோட பங்கு எவ்வளவு முக்கியம்னு பேசிட்டு இருக்கோம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி குழந்தைகள்னு வந்துட்டா அம்மா அப்பா ரெண்டு பெரும் அவங்களோட எல்லா வளர்ச்சி நிலையிலும் கூட இருக்கனும். குழந்தை உருவான நாளில் தொடங்கி முதல் 5 வருடங்கள் மிக முக்கியமான காலகட்டம். நீங்க குழந்தை முன்னாடி பேசும் பேச்சுக்கள் நடந்துக்கும் முறைகள் எல்லாம் குழந்தையோட வருங்காலத்தை நிர்ணயிக்கும். நீங்க நல்லகவனிச்சா தெரியும் குழந்தைகள் உங்களை அப்படியே பாத்து நீங்க செய்ற மாதிரிதா செய்வாங்க. ஒரு விளம்பரம் இருக்கு ஒரு குட்டி பொண்ணு அவங்க அம்மாவ பாத்து அவங்க பேசுற மாதிரி கைய கைய அசைத்து தொலைபேசி பேசும் அதுவும் அவங்கள மாதிரி நடந்துகிட்டு பேசும் பாக்க ரொம்போ அழகா இருக்கும். அந்த விளம்பரம் சொல்ற விஷயம்
Tamil e books free online read and download