…”நந்தா’வனம்”… (நந்தவனம் நாவல் பற்றி வாசகர் கவிதை)

…”நந்தா’வனம்”… (நந்தவனம் நாவல் பற்றி வாசகர் கவிதை)

நுழைவாயிலிலேயே,

வாசகர்களுக்கான வரவேற்பு வளையம் அமோகம்….

துடிப்பும், துடுக்கும் நிறைந்து, 

‘ பட்டாசு’ 

கிளப்பும் அறிமுகம்.

அறிமுகப்படுத்தப்படும்

பாத்திரங்கள்,

வெற்றுப் பாத்திரங்களாய் இராமல் 

உணர்வுகளின்

பிம்பங்களாய்,

 நம்மையும் அவற்றுடன் ஒன்றவைக்கும் நேர்த்தி.

வாசிக்கும் பொழுது,

வாசிக்கிறோம் என்ற உணர்வையும் தாண்டி,

உயிர்ப்புடன்

(உள்ளுக்குள் )

ஒரு நிகழ்வு நடப்பது போன்றதொரு உணர்வு.

படைப்பின் பக்குவம்

இவரது 

இதர படைப்புகளின்

பட்டியலைத் தேடுகிறது.

இனிய படைப்புகள்

பெருகி, பட்டியல் நீள

வாழ்த்துக்களும்,

ஆசிர்வாதங்களும்.

       –மரு.ஜெகதீஸ்வரன்.

உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

8

No Responses

Write a response